பதிவு செய்த நாள்
21
பிப்
2018
12:02
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி திருத்தேர் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த 14ம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
மறுநாள் அமாவாசையன்று மயானகொள்ளை, 18ம் தேதி தீமிதி விழா நடந்தது. முக்கிய விழாவான தேரோ ட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். மாலை 4:40 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் தேரில் எழுந்தருளினார். 5:10 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். காய்கனிகள், தானியங்கள், நாணயங்கள், உணவு பொருட்கள், பழங்களை தேரின் மீது பக்தர்கள் வாரி இறைத்து நேர்த்திகடன் செலுத்தினர். விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், எஸ்.பி., ஜெயக்குமார், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., ம ஸ்தான், மாவட்ட நீதிபதிசரோஜினிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவிஆணையர் பிரகாஷ்,அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர் உள்ளிட்டோர் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, வேலுார், கடலுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் 500க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.