நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டினர்.மாசி மாத வளர்பிறை முதல் திங்களான பிப்.,19 அன்று கணபதி ேஹாமம், 18 வகையான அபிேஷகம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையுடன் அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. அன்று மாலை முதல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.
நேற்று காலை சந்தன கருப்பு கோயிலில் தீர்த்தம் அழைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக சென்று அம்மன் கோயிலை அடைந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மஞ்சள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். மாலை அம்மன் குளத்தில் இருந்து கம்பம் கொண்டுவரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. விழா நாட்களில் சிம்மம், அன்னம், மயில் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் நகர்வலம் செல்கிறார். மார்ச் 6 அன்று கழுமரம் ஏற்றத்தை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். மறுநாள் அம்மன் மஞ்சள் நீராட்டையடுத்து பூப்பல்லக்கில் நகர்வலம் செல்வதுடன் விழா நிறைவடைகிறது.