பதிவு செய்த நாள்
21
பிப்
2018
12:02
திருப்பூர்: திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியுள்ளது. திருப்பூர், தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில், பொங்கல் விழா, கடந்த, 13ல், பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம், கணபதி பொங்கலும், இரவு, நொய்யல் ஆற்றிலிருந்து, கும்பம் மற்றும் கம்பம் எடுத்து வருதல், முளைப்பாரி, பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மேள தாளம், வாண வேடிக்கை நடந்தது. நள்ளிரவு கோவில் முன், பக்தர்களின் ஓம் Œக்தி கோஷம் முழங்க, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, பெண்கள், கம்பத்திற்கு நீரூற்றி, வேப்பிலை, மாலை, மஞ்சள் தூவி வழிபட்டனர். ஆதி பராŒக்தி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். @நற்றிரவு, 9:00 மணிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு பூவோடு எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், படைக்கலம் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, திருக்கல்யாணம், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பொங்கல் விழா நடக்கிறது.