திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ மாசிமகப்பெருவிழா‚ துவங்கியது. திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீட்டானேஸ்வரர் கோவலிலில்‚ மாசிமகப்பெருவிழா‚ நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7:00 மணிக்கு‚ அனுக்கை‚ விக்னேஷ்வரபூஜை‚ புன்யாகவாசனம்‚ கலசஸ்தாபனம்‚ பஞ்சாசனபூஜை‚ பஞ்சஆவரனபூஜை‚ ரிஷபவேஸ்வரர் பூஜை‚ துஜஸ்கம்பத்தில் தேவர்கள் ஆவாகனம் செய்யும் வைபவங்கள் நடந்தது. பகல் 10:30 மணிக்கு‚ ரிஷப கொடியேற்றப்பட்டு‚ துஜஸ்கம்பத்திற்கு சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு பஞ்சமூர்த்தி அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா நடந்தது.