பதிவு செய்த நாள்
22
பிப்
2018
10:02
பாலக்காடு: பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில், செம்பை ஏகாதசி சங்கீத உற்ஸவம், நாளை துவங்குகிறது. பிப்., 26ல் கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாஸ் கச்சேரி நடக்கிறது. செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது. கோவில் கொடியேற்றம் நாளை துவங்குகிறது.
தந்திரி அண்டலாடி சங்கரன் நம்பூதிரிபாடு தலைமை வகிக்கிறார். சங்கீத உற்சவத்தை, நாளை மாலை, 5:00 மணிக்கு நீதிபதி சேற்றுார் சங்கரன் நாயர் துவக்கி வைக்கிறார். கிருஷ்ணன் குட்டி, எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். டி.வி.கோபாலகிருஷ்ணன், தேவி நேத்யாரின் சங்கீத கச்சேரிகள்நடக்கும்.பிப்., 24 மாலை டாக்டர்லலிதா, நந்தினியின் வயலின் கச்சேரி, சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீத கச்சேரி நடக்கிறது. 25ம் தேதி மாலை ரஞ்சித்தின் சங்கீத கச்சேரி, சுப்ரமணியம், அம்பி சுப்ரமணியத்தின் வயலின் கச்சேரி, வர்ஷிணியின் பரத நாட்டியம் நடக்கும்.பிப்., 26 காலை, 8:45க்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. மாலை, 5:30க்கு புவனா ராமசுப்புவின் கச்சேரி, 6:00 மணிக்கு சென்னை ராமநாதனின் சாக்ஸபோன், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம், இரவு, 8:00 மணிக்கு விஜய் ஜேசுதாஸ் கச்சேரிகள் நடக்கும். இரவு, 9:00க்கு கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாஸ், 11:00 மணிக்கு ஜயன் கச்சேரிகள் நடக்கின்றன. பிப்., 27ல் உற்சவம் நிறைவடைகிறது.தலைமை நிர்வாகி செம்பை ஸ்ரீனிவாசன், நிர்வாகி சுரேஷ், கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.