பதிவு செய்த நாள்
22
பிப்
2018
11:02
பவானி: பவானியில் நடைபெறவுள்ள, மாசி திருவிழாவின் ஒரு பகுதியாக, கம்பம் நடும் விழா நேற்று இரவு நடந்தது. பவானி நகரின், காவல் தெய்வமாக உள்ள செல்லியாண்டியம்மன் - மாரியம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மாத பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டு கடந்த, 13 இரவு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று இரவு, 9:30 மணியளவில் செல்லியாண்டியம்மன் கோவில் அருகிலுள்ள மாரியம்மன், மேற்கு தெரு மாரியம்மன், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் இருந்து, கம்பங்கள் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், பூஜைகள் நடத்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில்களின் முன்னால் நடப்பட்டு தீபாராதனை நடந்தது. வரும், 27 அதிகாலை, 1:00 முதல் இருந்து மதியம், 12:00 மணிவரை அம்மன்களுக்கு புனித நீர் ஊற்றப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. 28ல், பொங்கல் திருவிழா நடைபெறவுள்ளது.