உடுமலை : பொம்மநாயக்கன்பட்டி காமாட்சியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 26ம் தேதி நடக்கிறது. உடுமலை பூளவாடி அருகிலுள்ள பொம்மநாயக்கன்பட்டியில், காமாட்சியம்மன் மற்றும் குட்டக்கார அப்பிச்சி கோவில் புதுப்பிக்கப்பட்டு, ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிேஷக விழா, வரும், 25ம் தேதி துவங்குகிறது. அன்று, காலை 6:00 மணியிலிருந்து முதற்கால யாக பூஜைகள் நடக்கிறது. இரண்டாம் கால யாக பூஜை, 26ம் தேதி அதிகாலை 4:30 மணி முதல் காலை 6:30 மணி வரை நடக்கிறது. காலை 6:00 மணிக்கு மேல், விநாயகர், முருகன், காமாட்சி அம்மன், குட்டக்கார அப்புச்சி மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை 7:30 மணி முதல் அன்னதானம் நடக்கும்.