பதிவு செய்த நாள்
22
பிப்
2018
01:02
திருவண்ணாமலை: புத்துணர்வு முகாம் சென்றிருந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, நேற்று அதிகாலை கோவிலுக்கு திரும்பியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, கடந்த ஜன., 2ல், தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றது. அங்கு முகாம் முடிந்ததையடுத்து, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலுக்கு திரும்பியது. லாரியில் வந்திறங்கிய யானைக்கு, தேரடி முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக கோவிலினுள் அழைத்து செல்லப்பட்டது. தொடர்ந்து, கோவில் குருக்கள், யானை ருக்குவுக்கு சிறப்பு பூஜை செய்து வரவேற்று, திருஷ்டி கழித்தனர். கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். புத்துணர்வு முகாமிற்கு செல்லும்முன், யானை ருக்கு, 5,000 கிலோ எடையில் இருந்தது. தற்போது, 15 கிலோ கூடி, 5,015 கிலோவாக உள்ளது.