வேண்டவாராசியம்மன் கோவிலில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2018 11:02
நெல்லிக்குப்பம் : வேண்டவாராசியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கான சிறப்பு வழிபாடு நடந்தது.நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியர், பொதுத்தேர்வை சிறப்பாக எழுத வேண்டி, அப்பகுதியில் உள்ள வேண்டவாராசியம்மன் கோவிலில், அறக்கட்டளை சார்பில் சிறப்பு வழிபாடுசெய்யப்பட்டது.இதில் பங்கேற்ற பள்ளி மாணவ - - மாணவியர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.அவர்களுக்கு, தேர்வுக்கு தேவையான எழுதுகோல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இவ்வழிபாட்டில், அறக்கட்டளை நிர்வாகிகளும், பள்ளி ஆசிரியர்களும்பங்கேற்றனர்.