பதிவு செய்த நாள்
23
பிப்
2018
11:02
தர்மபுரி: மாசி மாத கிருத்தியையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி எஸ்.வி.,ரோடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காலை, 6:00 மணிக்கு, முருகனுக்கு, பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம், குங்கும் உட்பட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, உற்சவ முருகர், சிறப்பு அலங்காரத்தில் தேரில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், நெசவாளர் காலனி சிவசக்தி முருகன்கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் சக்திமுருகன் கோவில், குளியனூர் பழனியாண்டவர் கோவில், லளிகம் முருகன் கோவில், பாப்பாரப்பட்டி சுப்பிரமணியசுவாமி கல்யாண முருகன் கோவில், இண்டூர் முருகன் கோவில், அதியமான்கோட்டை சிவசுப்பிரமணி சுவாமி கோவில், ?ஷசம்பட்டி பாலமுருகன் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.