பதிவு செய்த நாள்
23
பிப்
2018
12:02
மேச்சேரி: மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே, பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கருவறை சிவலிங்கம் மீது, ஆண்டுதோறும் மாசி, 21, 22, 23ல், காலை நேரம், சூரியஒளி விழும். அதன்படி, நேற்று, லிங்கம் மீது சூரிய ஒளிபட்டது. இக்காட்சியை, ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு, சிவனை வழிபட்டனர். ஏமாற்றம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வைக் காண, நேற்று ஏராளமானோர் கூடினர். ஆனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சூரியஒளி மறைக்கப்பட்டு, லிங்கம் மீது படுவது தெரியவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.