காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திரிகால ஞானேசர் கோவில் உண்டியலில், 2.50 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், திரிகால ஞானேசர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆறு மாதங்களுக்கு முன், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதன்பின், நேற்று காலை, கோவிலின் உண்டியல் திறக்கப்பட்டு, சரக ஆய்வர் ஜெ.சுரேஷ்குமார் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 2.50 லட்சம் ரூபாய் கிடைத்தது.