பதிவு செய்த நாள்
08
மார்
2018
11:03
சோமனுார்: ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சோமனுார் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருக்கல்யாண உற்சவ பூஜைகள் துவங்கின. 27ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. கடந்த, 5ம் தேதி மாலை, விநாயகருக்கு பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து அம்மன் அழைத்தல் பூஜை நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். கோவை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். மாலை, 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.