பதிவு செய்த நாள்
08
மார்
2018
12:03
நாயக்கன்பேட்டை: நாயக்கன்பேட்டை கிராமத்தில், படவேட்டம்மன் கோவிலில் கும்பாபி ேஷகம் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம், நாயக்கன்பேட்டை கிராமத்தில், பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, 69 ஆண்டுகளுக்கு பின், இன்று காலை, 9:50 மணிக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மஹா கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கடந்த 4ல், கிராம மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், படவேட்டம்மன் பரிவார மூர்த்திகளுடன் கரிக்கோலம் நிகழ்ச்சி நடந்தது. அதுபோல, தொடர்ந்து நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு நாகம்மனுக்கு, 9:00 மணிக்கு சப்த கன்னியர், துரவுபதிசமேத பஞ்சபாண்டவர்களுக்கு, காலை, 9:50 மணிக்கு படவேட்டம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை, நாயக்கன்பேட்டை கிராம மக்கள் செய்து உள்ளனர்.