பதிவு செய்த நாள்
08
மார்
2018
01:03
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் காட்ரோட்டில் உள்ள வழித்துணை விநாயகர் கோவிலில், இன்று, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்காக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலைப்பாதையின் நுழைவாயிலில் வழித்துணை விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் உபயதாரர்கள் மூலம், நாளை, நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 15 கலசங்கள் வைத்து, இன்று காலை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, மூன்று காலயாக பூஜைகள் நடக்கின்றன. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் காட்ரோட்டில் உள்ள வழித்துணை விநாயகர் கோவிலில், இன்று, காலை, 7:30 மணியிலிருந்து, காலை 9:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.