பதிவு செய்த நாள்
08
மார்
2018
01:03
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், குமரகுரு எம்.எல்.ஏ., பங்கேற்றார். உளுந்துார்பேட்டை ஸ்ரீகனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் 3ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. அதனையொட்டி சிறப்பு ேஹாமம், பூஜைகள், அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மயில்மணி குமரகுரு, ஸ்ரீவிநாயகா கல்லுாரி சேர்மன் நமச்சிவாயம், ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மாலதிராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் வளர்மதிபாண்டியராஜ், வழக்கறிஞர்கள் அன்பழகன், கிருஷ்ணன், திலீப், கூட்டுறவு சங்க துணை தலைவர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட அவை தலைவர் ராமசாமி, நகர அவை தலைவர் ஜெயபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வக்குமார், முத்துலட்சுமிதயாநிதி, ஆத்மா குழு தலைவர் கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.