கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மறைந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நினைவை போற்றும் வகையில், இரண்டாவது பிரகார ஐந்து நிலை கொண்ட கோபுர கலசத்தின் உச்சியில் நேற்று மாலை 5:30 மணியளவில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கிராம கோயில் பூஜாரிகள் பேரவையின் சார்பில் சிவநாம அர்ச்சனை, நாமாவளி, பாராயணம் செய்யப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பூஜாரிகள் பேரவை மண்டல அமைப்பாளர் கோதாவரி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அன்புமாறன், கோயில் பேஷ்கார் ஸ்ரீதர், ராமமூர்த்தி, முருகானந்தம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.