பதிவு செய்த நாள்
13
மார்
2018
11:03
திருப்பூர் : திருப்பூர், பலவஞ்சிபாளையம், ஷீரடி சாய் பாபா கோவிலில், முப்பெரும் விழா நடந்தது. கோவிலில், 1,008 சங்காபிேஷக விழா, கலசாபிேஷகம் மற்றும் அணையாத அக்னி ஏற்றும் விழா என முப்பெரும் விழா நடந்தது. இதனை முன்னிட்டு, 11ம் தேதி, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, ஷீரடி சாயி மகான் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், ஷீரடி சாய் ேஹாமம், மகா லட்சுமி ேஹாமம், தன்வந்திரி ேஹாமம் மற்றும் 1,008 சங்காபிேஷக பூஜை நடந்தன. தொடர்ந்து, மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.