துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2018 12:03
வால்பாறை : வால்பாறை சின்கோனா துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவின், 48வது மண்டல பூஜை நிறைவு சிறப்பு பூஜைகள் நடந்தன.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டான்டீ) இரண்டாம் டிவிஷன். இங்குள்ள துர்க்கை அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஜன., 21ம் தேதி நடந்தது. கோவில் வளாகத்தில் முருகன், விநாயகர், கருப்பசுவாமி, மதுரைவீரன் தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கு பின், 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. இதன் நிறைவு விழாவில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து காவல் தெய்வமாய் குதிரை வாகனத்தில் எழுந்தருளியுள்ள கருப்பசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.