பதிவு செய்த நாள்
13
மார்
2018
12:03
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, 21ம்தே தி காலையில், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த உற்சவத்தில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு செல்வர். இதற்காக, கோவில் ராஜகோபுரம் எதிரே, உள் பிரகாரத்தில் வாகன மண்டபம் எதிரே, நிழலுக்காக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேர் திருவிழா மற்றும் வெள்ளி தேர் உலா, திருக்கல்யாணம் ஆகிய உற்சவங்களை காண, ஏராளமான பக்தர்கள் வருவர். சிறப்பாக நடை பெறும் பங்குனி உத்திர திருவிழாவிற்கான பணிகள், கோவிலில் ஜரூராக நடந்து வருகின்றன.