கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2018 05:03
குடும்பத்தினர் மீது பேரன்பு மிக்க கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் 2-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன், 6-ம் இடத்தில் இருக்கும் ராகு,11ல் உள்ள சனி, செவ்வாய் தொடர்ந்து நற்பலன் தருவர். செவ்வாயால் எடுத்த முயற்சி அனைத் திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். குரு ஏப்.10-ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். இதனால் நன்மை உண்டாகும். புதனால் சிலருக்கு வீண்கவலை வரலாம். அவப்பெயர் ஏற்படலாம். இருந்தாலும் மற்ற கிரகங்களின் அனுகூலத்தால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்தது ஒவ்வொன்றாக நிறைவேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.
சுக்கிரனால் பொன், பொருள் சேரும். ஆடம்பர வசதி தாராளமாக கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். மார்ச் 26ம் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், -மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 15,16,17, ஏப்.11,12,13-ம் தேதிகளில் பெண்களின் ஆதரவு கிடைக்கும்.
விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 22,23-ம் தேதிகளில் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஏப்.7,8ம் தேதிகளில் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 20,21-ம் தேதிகளில் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
உடல் நலம் சுமாராக இருக்கும். கண் வலி வரலாம்.பெண்கள் குடும்ப வாழ்வில் குதூகலமாக இருப்பர். உங்களால் குடும்பம் சிறந்த நிலை அடையும். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. மார்ச் 20,21-ம் தேதிகளில் புத்தாடை,- அணிகலன்கள் வாங்கலாம். மார்ச் 28,29-ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
சகோதரர்களால் உதவி கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பான வளர்ச்சி பெறும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கேதுவால் அவ்வப்போது பணவிரயம் ஏற்படலாம். ஆனாலும் செவ்வாயின் சாதக பலனால் வருமானம் அதிகமாக இருக்கும்.
சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய தொழிலில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். மார்ச் 18,19 ஏப்.9,10-ம் தேதிகளில் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மார்ச் 26,27-ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். குருவால் ஏற்பட்ட பொருள் நஷ்டம், மன சஞ்சலம் முதலியன ஏப்.9-க்கு பிறகு மறையும். பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். அரசு ஊழியர்களுக்கு பணியிடத்தில் நற் பெயர் கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். சிலர் பதவி உயர்வு கிடைக்க பெறுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். ஏப்.4,5,6-ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் இருக்கும். சக கலைஞர்களின் மத்தியில் மதிப்பு கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். பொது நல சேவகர்கள், அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர்.
மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.
விவசாயிகள் நெல், கோதுமை, சோளம், கேழ்வரகு, பயறு, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்க பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.