காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5:45 மணிக்கு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. 6:15 மணியளவில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான காவடி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வரும் 21-ம் தேதி நடக்கிறது. அன்று மாலை முளைப்பாரி ஊர்வலம், காப்பு பெருக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 22-ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 23-ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடக்கிறது. விழா நாட்களில் மாலை 6:30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனையும், இரவு கலை நிழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமையில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகுபாண்டி, மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.