பதிவு செய்த நாள்
14
மார்
2018
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், கருட சேவையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும், யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவத்தில், மூன்றாம் நாளான நேற்று, கருட சேவை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு, கோவிலில் இருந்து, வாகன மண்டபத்திற்கு பெருமாள் எழுந்தருளினார். அலங்காரம் முடிந்து, யதோக்தகாரி பெருமாள் காலை, 6:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். சின்ன காஞ்சிபுரம் வரை சென்று, மீண்டும் காலை, 9:00 மணிக்கு, கோவிலை சென்றடைந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு, அனுமந்த வாகனத்தில், பெருமாள் வீதியுலா நடந்தது.