பதிவு செய்த நாள்
14
மார்
2018
11:03
உடுமலை : யுகாதி பண்டிகையை முன்னிட்டு, காந்திநகர் புற்றுக்கோவிலில், நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.உடுமலை காந்திநகர் புற்றுக்கோவிலில் ஆண்டுதோறும், யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, சிறப்பு வழிபாடு கடந்த 8ம் தேதி துவங்கியது. நாள்தோறும், புற்று சுத்தம் செய்து, ஆரம்ப பூஜை நடக்கிறது.நேற்றுமுன்தினம், பழனியம்மாள் லே-அவுட், எஸ்.என்.ஆர்., நகர், சாய்ராம் லே-அவுட், கொங்குரார் லே-அவுட் பக்தர்கள் சார்பிலும், நேற்று வாளவாடி கிராம மக்கள் சார்பிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வரும் 17ம் தேதி இரவு 7:00 மணிக்கு, புற்று பூஜையும், இரவு 10:00 மணிக்குள், ரேணுகாதேவி அம்மன் சக்தி அழைப்பும் நடக்கிறது. வரும், 18ம் தேதி யுகாதி பண்டிகையன்று, ஜி.வி.ஜி., கலையரங்கில், காலை 10:00 மணி முதல் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.