பதிவு செய்த நாள்
14
மார்
2018
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் நுாற்றாண்டு விழாவில், 17வது ஆராதனை விழா நேற்று நடந்தது.செந்தில் கனபாடிகள் தலைமையில், சிறப்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மூலவர் யோகி ராம் சுரத்குமார் லிங்க சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. நேற்று காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை, பக்தர்கள், தங்களது அனுபவங்களை பகிர்தல் நிகழ்ச்சி நடந்தது.மாலையில் சற்குருநாத ஓதுவார் குழுவினரின், தேவார இசை நிகழ்ச்சி, மாலை, 6:15 மணி முதல், 8:15 மணி வரை, ராமாயணமும் ராம்சுரத்குமாரும் என்ற தலைப்பில், ஜோசப் சிறப்பு சொற்பொழிவாற்றினார். இன்று காலை முதல், இரவு வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, ஆஸ்ரம நிர்வாகி, ஓய்வு பெற்ற ஜஸ்டிஸ் அருணாசலம் செய்திருந்தார்.