பதிவு செய்த நாள்
14
மார்
2018
11:03
மேட்டுப்பாளையம்: பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத்தேர்திருவிழா நிறைவடைந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதர், ஆஸ்தானம் என்றழைக்கப்படும் இருப்பிடம் சென்றார்.
கோவிலில், மாசி மகத்திருத்தேர்திருவிழா, கடந்த மாதம் 22ம் தேதி, கிராம சாந்தி உற்சவத்துடன் தொடங்கியது. இம்மாதம் 5ம் தேதி வசந்த உற்சவத்துடன் பூர்த்தியானது. கடந்த மாதம் 28ம் தேதியில் நடந்த, திருக்கல்யாண உற்சவ நாளிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவிசமேத ஸ்ரீரங்கநாதர், திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் வடப குதியிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார். கிருஷ்ணபட்ச ஏகாதசி நாளான நேற்று, கல்யாண மண்டபத்தில் ஸ்தபன திருமஞ்சனம் எனும், விசேஷ அபிேஷகம் நடை பெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வெண்பட்டு குடை சாமரங்கள் வீச, திருக் கோவிலை வலம் வந்து ஆஸ்தான மண்டபமான மகா மண்டபத்தில் எழுந்தருளினார். திருவாராதானை, சாற்றுமறை பாசுரங்கள் சேவித்து, மஹா ஆரத்தி காண்பித்து, பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைப வத்தில் ஸ்தலத்தார்கள்,அர்ச்சகர்கள், இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.