மாகாளியம்மன் கோவில் விழா: அலகு குத்தி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2018 12:03
வால்பாறை : சிறுகுன்றா மாகாளியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் அம்மனை வழிபட்டனர். வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் மாகாளியம்மன் கோவில் விழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த, 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம்நடந்தது. கடந்த, 11ம் தேதி காலை, 11:30 மணிக்கு மதுரைவீரன் கோவிலி லிருந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.