கோவை : வேத பாடசாலை சார்பில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, குரு ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆர்.எஸ்.,புரம் ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி யோக நரசிம்மர் சன்னிதியில் இருந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திரு உருவம் அடங்கிய ரத ஊர்வலம் நடந்தது. வேத பாடசாலை மாணவர்கள், 70 பேர் பஜனையுடன் ரதத்தை ஊர்வலமாக இழுத்துச்சென்றனர். சன்னிதியில் துவங்கிய ஊர்வலம், டி.வி.சாமி ரோடு, தடாகம் ரோடு வழியாக மீண்டும் சன்னிதியை அடைந்தது. ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரவி சாம் உட்பட பலர் பங்கேற்றனர்.