Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனின் வடிவங்களும் வழிபாட்டு ... ஷீரடி சாயிபாபா கோயிலில் இனிக்கும் வேம்பு! ஷீரடி சாயிபாபா கோயிலில் இனிக்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
காரடையான் நோன்பு: எல்லா நன்மைகளையும் அருளும் யமாஷ்டகம்
எழுத்தின் அளவு:
காரடையான் நோன்பு: எல்லா நன்மைகளையும் அருளும் யமாஷ்டகம்

பதிவு செய்த நாள்

14 மார்
2018
03:03

காரடையான் நோன்பு அன்று யமாஷ்டகம் துதியை பாராயணம் செய்பவர்கள் சகல நலன்களையும் அடைவார்கள். தன் பத்தினிப் பண்பால் தன் கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்டாள் சாவித்திரி. யமதர்மராஜனைக் குறித்து யமாஷ்டகம் பாடி அவ்வாறு அவள் தன் கணவனை மீட்டுக்கொண்ட நாளே காரடையான் நோன்பு நாளாக சுமங்கலிப் பெண்களால் கொண்டாடப்படுகிறது. சாவித்திரி துதித்த இத்துதியை காரடையான் நோன்பு அன்று பாராயணம் செய்தால் மங்கலங்கள் பெருகும். கணவனின் ஆயுள் விருத்தியாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

தபஸா தர்மமாராத்ய புஷ்கரே பாஸ்கர: புரா
தர்மம் ஸூர்ய ஸுதம் தர்மராஜம் நமாம்யஹம்
முன்பு ஒரு சமயம் புஷ்கரம் எனும் க்ஷேத்திரத்தில் சூரிய பகவான் தவம் செய்து தர்மதேவதையை ஆராதித்து, தர்மன் என்ற மகனை அடைந்தார். அந்த தர்மராஜரை நமஸ்கரிக்கிறேன்.

ஸமதா ஸர்வபூதேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண:
அதோ யந்நாம ஸமனம் இதி தம் ப்ரணமாம்யஹம்
எல்லாப் பிராணிகளின் இதயத்திலும் சாட்சியாக இருக்கும் யமதர்மராஜனே நமஸ்காரம். அனைத்துப் பிராணிகளையும் சமமாக பாவிப்பதால், சமனன் என்றும் பெயர் கொண்ட யமதர்மராஜனே நமஸ்காரம்.

யேனாந்தச்ச க்ருதோ விச்வே ஸர்வேஷாம் ஜீவினாம் பரம்
காமானுரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்
உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவை ஒவ்வொன்றன் ஆயுளையும் முடிவு செய்யும் காரணத்தால் கிருதாந்தன் என்றும் போற்றப்படும் யமதர்மராஜனே நமஸ்காரம்.

பிபர்த்தி தண்டம் தண்டாய பாபிநாம் சுத்தி ஹேத வே
நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா ஸர்வஜீவினாம்
மனிதர்களுக்கு (சாஸ்தாவாக) எஜமானனாக இருந்து கொண்டு பாவம் செய்பவர்கள், தாம் செய்யும் அந்தப் பாவத்திலிருந்து விலகுவதற்காகத் தண் டனையைத் தருவதால் தண்டதரன் என்றும் பெயர் பெற்ற யமதர்மராஜனே நமஸ்காரம்.

விச்வம் ச கலயத்யேவ ய: ஸர்வேஷு சஸந்ததம்
அதீவ துர்நிவார்யம் சதம் காலம் ப்ரணமாம்யஹம்
காலவடிவாக இருந்து கொண்டு ஜீவராசிகளின் காலத்தைக் கணிப்பவரும், எவராலும் ஏமாற்ற முடியாதவருமான காலன் என்ற யமதர்மராஜனே, நமஸ்காரம்.

தபஸ்வீ ப்ரஹ்மநிஷ்டோ ய: ஸம்யமீ ஸந் ஜிதேந்த்ரிய:
ஜீவானாம் கர்மபலத : தம் யமம் ப்ரணமாம்யஹம்
சிறந்த தபஸ்வியாக, பிரம்மநிஷ்டராக, இந்திரிய, மன அடக்கமுள்ளவராக, ஜீவன்களின் வினைக்குத் தகுந்த பயனை அளிப்பவராகத் திகழும் யமதர்மராஜனே நமஸ்காரம்.

ஸ்வாத்மாராமச்ச ஸர்வக்ஞோ மித்ரம் புண்யக்ருதாம் பவேத்
பாபிநாம் க்லேசதோ நித்யம் புண்யமித்ரம் நமாம்யஹம்
ஆத்மாவில் ரமிப்பவரே, எல்லாம் அறிந்தவரே, புண்ணியம் செய்பவர்களுக்கு நண்பராக விளங்குபவரே, பாவிகளுக்குத் துன்பம் அளிப்பவரே, பு ண்ணியமித்ரன்
என்ற பெயருள்ளவரே, யமதர்மராஜனே, நமஸ்காரம்.

யஜ்ஜன்ம ப்ரஹ்மணோம்சேன ஜ்வலந்தம் ப்ரம்மதேஜஸா
யோ த்யாயதி பரம் ப்ரஹ்ம தமீசம் ப்ரணமாம்யஹம்
பிரம்மாவின் அம்சமாக அவதரித்தவரே, பிரம்மதேஜஸால் ஒளிர்பவரே, பரப்பிரம்ம ஸ்வரூபத்தை உபதேசிப்பவரே, ஈசனாகத் திகழ்பவரே, யமதர்மராஜனே நமஸ்காரம்.

யமாஷ்டகமிதம் நித்யம் ப்ராதருத்தாய ய: படேத்
யமாத் தஸ்ய பயம் நாஸ்தி ஸர்வ பாபாத் விமுச்யதே
சாவித்திரி துதித்த இந்த யமாஷ்டகத்தைத் தினமும் காலையில் படிப்பவர்கள் யம பயத்தை அடைய மாட்டார்கள்; எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள். குறிப்பாக காரடையான் நோன்பு அன்று இத்துதியை பாராயணம் செய்பவர்கள் சகல நலன்களையும் அடைவார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar