விருதுநகர் : மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால் இன்றும், நாளையும் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.