அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2018 10:03
மயிலாடுதுறை: அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில், அமாவாசையை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து சிறப்பு யாகம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலில் ராவ ணன் மகன் மேகநாதன், பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். பிரசித்தி பெற்ற கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்புவாந்தது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரனடைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். அமாவாசையான இன்று காலை கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.
16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, தண்டபாணி குருக்கள் யாககுண்டத்தில் மிளகாய் வற்றளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை மனமுருகப் பிரார்த்தனை செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து சிறப்புபஸ்கள் இயக்கப்பட்டன.