பதிவு செய்த நாள்
19
மார்
2018
11:03
திருச்சி: திருச்சி, திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் மாசி உற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது.
பஞ்சபூத தலங்களில், நீர் தலமான திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில், பங்குனி தேர் திருவிழா மார்.,14ம் தேதி எட்டு திக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும், சூரிய பிரபை, சந்திர பிரபை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(மார்.,19ல்) கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். வரும் 23ம் தேதி, நடராஜர் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெறும். 24 முதல் 26ம் தேதி வரை, சுவாமி அம்பாள் பல்லக்கு ஊர்வலமும், 27 முதல் 29ம் தேதி வரை மவுனோத்ஸவம், 30ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை, சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறும்.