பதிவு செய்த நாள்
19
மார்
2018
11:03
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ஆரிய வைசிய சங்கத்தின் சார்பில், 16ம் ஆண்டு யுகாதி பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம், பெரிய தெருவில் அமைந்துள்ள, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆரிய வைசிய சங்கத்தின் சார்பில், யுகாதி புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 16ம் ஆண்டு யுகாதிப் பெருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 7:00 மணிக்கு மகா அபிஷேகம், மலர் அர்ச்னை நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பலன்கள் தெரிவிக்கும் பஞ்சாங்கம் வாசித்தலும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் விஷேச அலங்காரத்தில் அருள்பாலித்து, வீதிஉலா வைபவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.