பதிவு செய்த நாள்
19
மார்
2018
11:03
திருப்பதி: திருமலையில், மார்ச், 20ல், மூத்த குடிமக்கள் மற்றும் மார்ச், 21ல் கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசன வசதி செய்யப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், மாதந்தோறும் இரு நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைகுழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசன வசதி வழங்கி வருகிறது. வரும், மார்ச், 20ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. அதேபோல், மார்ச், 21ம் தேதி, காலை, 9:00 மணி முதல் மதியம், 1:30 மணிவரை, ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசன வசதி செய்யப்பட உள்ளது.
யுகாதி ஆஸ்தானம்: திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு நேற்று, திருமலைஏழுமலையான் கோவிலில்ஆஸ்தானம் நடந்தது. ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான, மலையப்பஸ்வாமியை, ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவிலுக்குள் உள்ள கருடாழ்வார் எதிரில் சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளசெய்தனர்.அர்ச்சகர்கள், புத்தாண்டான விளம்பி ஆண்டின் பஞ்சாங்கத்தை படித்தனர்.