பதிவு செய்த நாள்
19
மார்
2018
12:03
நகரி: தெலுங்கு வருட பிறப்பையொட்டி, நகரி மற்றும் புத்துார் பகுதிகளில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பஞ்சாகம் வாசிக்கப்பட்டன. சித்துார் மாவட்டம், நகரி டவுனில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள கரிய மாணிக்க பெருமாள் கோவிலில், நேற்று யுகாதி பண்டிகையையொட்டி (தெலுங்கு வருட பிறப்பு), மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 4:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து காலை, 8:00 மணி முதல், காலை, 9:00 மணி வரை விளிம்பி ஆண்டு பிறப்பையொட்டி, ஆண்டு சிறப்பு பலன்கள் குறித்து நகரியைச் சேர்ந்த பிரசாதவர்மா மற்றும் தேவஸ்தான அர்ச்சகர்கள் ஆண்டு பலன் குறித்து விளக்கி கூறினார்.
தொடர்ந்து, அங்கு கூடியிருந்த, யுகாதி பிரசாதம் வழங்கப்பட்டது. பஞ்சாங்கம் வாசித்த பிரசாதவர்மாவுக்கு பக்தர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். இதே போல், புத்துார் பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும், யுகாதியையொட்டி, சிறப்பு பூஜைகள் மற்றும் பஞ்சாகங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. நாராயணவனம் பகுதியில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலிலும், கோவில் அர்ச்சகர்கள் யுகாதி பண்டிகையையொட்டி, பஞ்சாகம் வாசித்தனர். இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.