பதிவு செய்த நாள்
19
மார்
2018
01:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், தேவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மங்களகிரி வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வீதிவுலா சென்று, பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். இதற்காக நேற்று மாலை, 6:30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து பெருமாள் புறப்பட்டு,. இரவு, 8:00 மணிக்கு மீண்டும் கண்ணாடி அறை சென்றடைந்தார். அதன் பின், பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்சி நடைபெற்றது. வரும், 24ல் பங்குனி உத்திர திருவிழா இக்கோவிலில் துவங்குகிறது. தினமும், 100 கால் மண்டபத்தில் பெருமாள் ஊஞ்சல் சேவை நடைபெறும். 30ல் கோவில் நான்கு கால் மண்டபத்தில் பெருமாள், தாயார் திருக்கல்யாணம் முடிந்து, இரவு ஆண்டுக்கு ஒரு நாள், பெருமாள் தாயார் சன்னதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.