கோவை : ராமநாதபுரம், பாரதி நகரில் அமைந்துள்ளது, முத்தி விநாயகர் மற்றும் முத்தி அம்மன் கோவில். இக்கோவில், கும்பாபிேஷக விழா நேற்று மாலை திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. நேற்றிரவு, முதற்கால வேள்வியை தொடர்ந்து, விமான கலசம் வைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியும், திருமேனிக்கு காப்பு அணிவித்தலும் நடக்கிறது. காலை, 5:30 மணிக்கு, இரண்டாம் கால வேள்வியை தொடர்ந்து, திருக்குடங்கள் கோவிலை வலமாக எடுத்து வரப்படுகிறது. காலை, 6:30 முதல் 7:30 மணிக்குள், கும்பாபிேஷகம் நடக்கிறது.