பதிவு செய்த நாள்
19
மார்
2018
01:03
கோவை : ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானத்தில், யுகாதி பண்டிகை முன்னிட்டு, அடியார்களுக்கு பாதபூஜை செய்யப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு, மலையடிவாரத்தில் உள்ளது, கருட சேவாஸ்ரம டிரஸ்ட்டின், கோவை ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம்.தேவஸ்தான வளாகத்தில், இரு ஆண்டுகளுக்கு முன், ஆயர்பாடி கண்ணன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, பெருமாள் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கோவில் வளாகத்தில் பல்வேறு திருப்பணி நடந்து வருகிறது.
இக்கோவிலில் தினமும் காலை, நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவிக்கப்படுகிறது. மதியம், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் இசைக்கப்படுகிறது.யுகாதி பண்டிகையை முன்னிட்டு, ராமானுஜ கூடங்கள், கோவில்கள், திவ்யதேசங்களுக்கு சென்று நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவித்து வந்த, 18 அடியார்களுக்கு பாதபூஜை செய்யப்பட்டது.