பதிவு செய்த நாள்
19
மார்
2018
02:03
புன்செய்புளியம்பட்டி: யுகாதியை முன்னிட்டு, ஊத்துக்குளி அம்மன் கோவிலில், பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். யுகாதி பண்டிகையான நேற்று, புன்செய்புளியம்பட்டி, ஊத்துக்குளி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் வளாக பகுதியில் ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, நெய் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர். பின்னர், ஊத்துக்குளி அம்மன் உற்சவர், சப்பரத்தில் எழுந்தருளினார். யுகாதி பண்டிகை சிறப்பம்சமாக, அபிஷேகத்தில் வேப்பம்பூ கலந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.