பதிவு செய்த நாள்
19
மார்
2018
02:03
திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, வரும், 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த மாதம், 8ம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, வரும், 21ம் தேதி கணபதி, நவகிரக ஹோமம், கோ பூஜை மற்றும் யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. பின், 22ம் தேதி காலை, 6:30 மணிக்கு பாரத கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. பின், தினமும் மூலவர் அம்மனுக்கு காலை, 8:00 மணிக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. வரும், 28ம் தேதி, திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், அன்னதானம் மற்றும் இரவு திரவுபதி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. வரும், 30ம் தேதி, சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம், ஏப்., 8ம் தேதி, காலை, துரியோதனன் படுகளம், மாலை, 6:30 மணிக்கு, தீமிதி திருவிழாவும், 9ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.