பதிவு செய்த நாள்
20
மார்
2018
11:03
பழநி: பழநி முருகன்கோயில் பஞ்சாமிர்த டப்பாக்களில் தயாரிப்பு நாள், காலாவதி விபரம் குறிப்பிட்டு விற்பனை செய்கின்றனர்.திருப்பதி லட்டு பிரசாதம் போல, பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் புகழ்பெற்றது. வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம் போன்ற ஐந்து பொருட்களை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. பழநிகோயில் சார்பில், அபிேஷக பஞ்சாமிர்தம், நவீன இயந்திரங்கள் மூலம் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
அரைக் கிலோ டப்பா ரூ.35, டின் ரூ.40க்கு விற்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 25கோடி வரை விற்பனையாகிறது. பஞ்சாமிர்தம் பிரசாதம் என்பதால் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடப் படாமல் விற்பனை செய்தனர். இருப்பினும் உணவுப்பொருளாக இருப்பதால் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.இதனால் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பழநிகோயில் பஞ்சாமிர்தம் டப்பாவில் தயாரிப்புநாள், 15 நாட்கள் பயன்படுத்தலாம் என்ற விபரம் குறிப்பிடப்பட்டு விற்னை செய்யப்படுகிறது.