பதிவு செய்த நாள்
20
மார்
2018
11:03
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே குண்டத்து காளியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி அருகே பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா, கடந்த, 16ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல்; விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, முதற்கால வேள்வி, நிறை வேள்வி, எண் வகை மருந்து சாற்றுதல் பூஜையும் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, காலை, 6:00 மணிக்கு முழுநிறை வேள்வி, காலை, 6:30 மணிக்கு திருக்குடங்கள் உலா வருதல்; காலை, 7:20 மணிக்கு குண்டத்து காளியம்மனுக்கு மகா கும்பாபிேஷகம், காலை, 9:00 மணிக்கு மகா அபிேஷக பூஜைகளும் நடந்தன.