பதிவு செய்த நாள்
20
மார்
2018
11:03
சிவகாசி;சிவகாசி ஈஞ்சார் பகுதி விவசாய நிலத்தில், கல் சிலை ஒன்று உள்ளது. ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசியை ஒன்றிணைந்து பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் கீழ், ஈஞ்சார் பெரிய சமஸ்தானமாக இருந்துள்ளது. இதை நிருபிக்க,பாண்டிய மன்னரின் ஒருவரான மறவன்மணி சுந்திரபாண்டியர் காலத்தில் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில் ஒன்று இங்கு உள்ளது. தற்போது, கோயில் பராமரின்றி கேட்பாரற்று உள்ளது.
இதுபோல்,இங்குள்ள விவசாய நிலத்தில் மன்னரின் சிலை ஒன்று உள்ளது.இதன் அருகே இளவரசி சிலையும் இருந்தது.இளவரசி சிலையை யாரோ திருடிச் செல்ல, மன்னர் சிலை மட்டும் உள்ளது. மழை, வெயிலில் நனைந்தபடி சிலை கம்பீரமாக காட்சி அளித்தாலும், பல ஆண்டுகள் அப்படியே இருப்பதால் சேதமாகி வருகிறது.ஒரு சிலர், சிலையை இன்றளவும் பூஜித்து வணங்கிச் செல்கின்றனர்.தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து ,சிலையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.