உங்களுக்கு ஒரு விஷயத்தில் சந்தேகம் வந்து விட்டது என்றால், அதை நிச்சயமாக செயல்படுத்தக் கூடாது. சந்தேகத்துடன் செய்யப்படும் எந்த செயலும் தோல்வியையே தழுவும். சில சமயங்களில், அது நம்மை பெரும் சிக்கலில் மாட்டவும் செய்யும். இது போல, ஒருவரைப் பற்றி இவர் இப்படித்தான் இருப்பார் என்று சந்தேகத்துடன் பேசுவது, சந்தேகப்படுவது ஆகியவையும் வாழ்க்கையை சூன்யமாக்கி விடும். இதுபற்றி நாயகம், “நீங்கள் தவறான எண்ணங்களை, சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும்,” என்கிறார்.