தாவீது ராஜாவிடம் ஒரு பொற்கொல்லர், “ராஜாவே! ஏதாவது நகை செய்ய வேண்டுமா?” என்றார். அவரை கண்டு எரிச்சல்பட்ட ராஜா, “ஆமாம்... எனக்கு ஒரு மோதிரம் செய்து வா. ஆனால் ஒரு நிபந்தனை... நான் துக்கத்தில் இருக்கும் போது அதைப் பார்த்தால் மகிழ்ச்சி வர வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும் போது பார்த்தால் துக்கப்பட வேண்டும். அந்த மாதிரி மோதிரம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் தலை துண்டிக்கப்படும்!” என்று சொல்லி அனுப்பினார். இப்படி ஒரு மோதிரத்தை எப்படி செய்வது என பொற்கொல்லர் திகைத்தார். இதை கண்ட சிறுவன் சாலமோன், “பொற்கொல்லரே... இதற்காகவா அழுகிறீர்கள்! சாதாரண ஒரு மோதிரம் செய்து, அதில் “எல்லாம் கடந்து போகும்“ என்று பொறியுங்கள். பிரச்னை முடிந்தது.” என்றான்.
பொற்கொல்லரும் அதே போல செய்தார். அதை பெற்ற ராஜா,“ஆஹா... அருமை!” என்று பொற்கொல்லரை தழுவினார். “இனி நீ அழுது கொண்டிராய். உன் கூப்பிடுதலின் சத்தத்திற்கு அவர் உருக்கமாய் இரங்கி அதை உடனே உனக்கு மறு உத்தரவு அருளுவார்” என்ற பைபிள் வசனத்தை மறக்காதீர்கள். பிரச்னை வந்தால் அழாதீர்கள். உருக்கமாக ஜெபியுங்கள்.