Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதம் பதித்த மண்டபம் கடலிலே புடிச்சு தள்ளுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
01:03

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்!* கண்களில் அன்பு இருந்தால் மட்டுமே கற்சிலையில் தெய்வத்தை தரிசிக்க முடியும். உள்ளத்தில் அன்புள்ளவர்கள் எல்லா உயிர்களையும் கடவுளாகவே கருதுவர்.
* உலகில் காண்பதெல்லாம் முதலில் அழகாக தெரியும். ஆனால் அறிவுக்கண்ணை திறந்து பார்த்தால் உண்மை புரியும்.
* இருப்பதை கொண்டு வாழ தெரிந்தவனுக்கே அமைதி, தன் வாசலை திறக்கும். அந்த வாசலை அடைந்தவர்கள் மேலான வாழ்வை எட்டி விட்டனர் என்பது பொருள்.
* மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே உயர்ந்தவன். எது வந்தாலும் மகிழ்வுடன் ஏற்று வாழ்க்கையை திறம்பட அவனால் நடத்த முடியும்.
* தீய ஆசைகளை நீக்கினால், பரபரப்பு, பதட்டம் உண்டாகாது. எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்.
* அறியாமை போல் துன்பம் தருவது வேறில்லை. அறியாமையுடன் இருக்கும் மனிதன் மதிப்பு இழந்து கீழான நிலையை அடைவான்.
* கீழ்குணம் படைத்த மனிதர்கள், சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், பொருட்களைச் சேர்ப்பதிலும் வீணாக காலத்தை கடத்துகிறார்கள்.
* நடுநிலை தவறாதவன் இன்பத்தை கண்டு துள்ளவோ, துன்பத்தை கண்டு துவளவோ மாட்டான்.
* சாந்தமே ஒருவனுக்கு பேரழகு தரும். ஏனெனில் அது தான் குணத்தில் உயர்ந்து விளங்குகின்றது.
* அறிவு என்னும் சிங்கம், மனதில் உண்டாகும் காட்டு யானை போன்ற பெருந்தவறை கூட கிழித்து எறிந்து விடும்.
* தீயவர்களை விட்டு விலகு. அவர்கள் காற்று கூட நம்மை தீண்டாமல் பார்த்து கொள்வது அவசியம்.
* சத்தியத்தை தேர்ந் தெடுப்பவன் முதலில் புறக்கணிப்பது பொய் தான். அது இருந்தால் சத்தியத்தின் நிழல் கூட உன் மீது விழாது.
* நல்லவர்களின் நட்பே உண்மையான செல்வம். அதுவே எல்லா நன்மைகளையும் வாரி வழங்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar