பதிவு செய்த நாள்
21
மார்
2018
11:03
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று, திருக்கல்யாண வைபோகம் நடந்தது. திருவள்ளூர், பஜார் தெருவில், திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது.
கோவில் பூஜைகள் நித்தியம், நைமித்திகமென இரு வகைப்படும். நித்தியத்தின் குறைவு தீரச் செய்வது நைமித்திக பூஜை. இதையொட்டி, பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு. பிரம்மோற்சவ விழா, 12ம் தேதி இரவு. கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம். நேற்றிரவு. 7:00 மணிக்கு நடைபெற்றது. திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் மணமேடைக்கு எழுந்தருளினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு களித்தனர். பின், இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் புறப்பாடு நடந்தது. இன்று காலை, சிவிகை பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும், உற்சவர் வலம் வருவார். வரும் 23ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, மகா அபிஷேகமும், அன்றிரவு தொட்டி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா காலங்களில், காலை, மாலை வேத பாராயணம் நடைபெற்றது.