பதிவு செய்த நாள்
22
மார்
2018
11:03
சிவகங்கை, சிவகங்கை விஸ்வநாதசுவாமி கோயிலில் சுப்ரமணிய சுவாமி பங்குனி உத்திர விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இக்கோயில் பங்குனி உத்திர விழா நேற்றுமுன்தினம் மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது.
நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு 8:30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் காலை மண்டகப்படியிலும், இரவில் பெரிய ரிஷபம், பெரிய மயில், அன்னம், யானை, ரிஷபம், ஆட்டுகடா, வெள்ளிகுதிரை போன்ற வாகனங்களில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கும். மார்ச் 28 மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், மார்ச் 29 மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், இரவு 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கின்றன. மார்ச் 30 காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 8:30 மணிக்கு மயில் வாகனத்தில் எழுந்தருளல், மார்ச் 31 இரவு 8:30 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கின்றன.