ஸ்ரீவி., ஆண்டாள் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2018 05:03
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் விழா இன்று ( மார்ச் 22ல்) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. 13 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவில் வீதியுலாவும் நடக்கிறது. மார்ச் 30 காலை 7:05 மணிக்கு செப்புத்தேரோட்டம், மாலை 6:25 மணிக்கு ,கோயில் முன்புள்ள பந்தல் மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்ரல் 3 ல் ஆண்டாள் சன்னதியில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் செய்கின்றனர்.