திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் பங்குனி உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2018 11:03
கீழக்கரை:திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை பூஜையும், நேற்று காலை உற்ஸவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவை நடந்தது.
காலை 11:00 மணியளவில் கொடிமரத்தில், கருடாழ்வார் உருவம் பொறித்த வெண்ணிற கொடியில் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன், நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வருகிற மார்ச் 30 காலை 9:00 மணிக்கு பெரிய தேரோட்டம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.